பன்றியின் பித்தப்பை கல்லால் கோடீஸ்வரரான விவசாயி!!

367

சீனாவில் தனது பண்ணையில் கிடைத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் விவசாயி ஒருவர் கோடீஸ்வரர் ஆன சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் 51 வயதான விவசாயி ஒருவருக்கு அவரது பண்ணையில் உள்ள விவசாய நிலத்தில் விதைத்துக் கொண்டிருந்த போது, வித்தியாசமான கல் போன்ற பொருள் கிடைத்தது.

அது 4 அங்குல நீளமும் 2.5 அங்குல அகலமும் கொண்டிருந்தது. அதன் மீது அடர்த்தியான ரோமங்கள் படிந்திருந்தன. அது பற்றிய விபரங்களைத் தன் நண்பர்களிடம் அவர் கேட்டுள்ளார்.

அதன்போது, பன்றியின் பித்தப்பையில் உருவாகிய கல் என தெரிய வந்தது. அதை கோரோசனை என்றும் அழைப்பார்கள்.
இது பலவிதமான நோய்களைத் தீர்க்கும் ஒரு மருந்தாகும்.

மேலும், உடலில் சுரக்கும் நச்சுகளை வெளியேற்றும் தன்மையுடையது. எனவே இதை மருந்துகளில் கலக்கின்றார்கள். சீனாவில் இது விலை மதிக்க முடியாதது.

விவசாயிக்கு கிடைத்துள்ள இந்த பன்றி பித்தப்பைக் கல் சுமார் 4500 பவுண்ட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் திடீர் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.