வவுனியா கோவிற்குளம் கமநல சேவைகள் நிலையத்தினால் ஏமாற்றப்பட்ட பொதுமக்கள்!!

700


 
பெரியகோமரசங்குளம், கல்வீரன்குளம் கிராம விவசாயிகளை நெல் உரமானியம் வழங்குவதற்கான கையொப்பமிடுவதற்கு இன்று (04.12.2017) காலை கோவிற்குளம் கமநல சேவைகள் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.

தங்களது வேலைகளையும் விட்டு கமநல சேவைகள் திணைக்களத்திற்கு வருகைதந்த விவசாயிகளிடம் இன்று குறிப்பிட்ட சிலருக்கே சேவை வழங்க முடியும் மற்றவர்களை நாளைமறுதினம் (புதன்கிழமை) வருமாறு தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா கோவிற்குளம் கமநல சேவைகள் உத்தியோகத்தரிடம் கேட்டபோது..



எமது அலுவலக உத்தியோகத்தர்கள் சிலர் முருகனூர் பண்ணைக்கு சென்றுள்ளதால். ஒரு சில உத்தியோகத்தர்களே அலுவலகத்தில் கடமை புரிகின்றனர். எனவே எம்மால் 65 நபர்களுக்கு மாத்திரமே சேவையினை வழங்க முடியும் எனவே மற்றைய நபர்களை புதன்கிழமை வருமாறு தெரிவித்ததாக தெரிவித்தனர்.

அன்றாடம் கூலி வேலைக்கு சென்று தங்களது குடும்பங்களின் வருமானத்தினை பெற்றுக்கொள்ளும் விவசாயிகளை இவ்வாறு இன்று நாளை என திணைக்கள அதிகாரிகள் தெரிவிப்பது சரியா என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.