வவுனியா மாவட்ட செயலகத்தில் சிங்கள மொழியில் அறிவித்தல் பலகைகள் : தமிழ் புறக்கணிப்பு?

301


 
இதுவரை காலமும் மாவட்ட செயலகத்தால் அமைக்கப்பட்ட பதாதைகள் அனைத்துமே மும் மொழிகளிலும் அமைந்திருந்தன.

ஆனால் இம்முறை புதிதாக மன்னார் வீதியில் கச்சேரிக்கு முன்பாக (பிரதேச செயலகம் மற்றும் கச்சேரிக்கும் இடையில்) தனி சிங்கள மொழியிலான பதாதை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.



தமிழர் அதிகம் வாழும் பிரதேசத்தில் தனிச் சிங்கள மொழியிலான பதாதை வைத்திருப்பது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?

இதேவேளை மாவட்ட செயலகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நீர் விநியோக கட்டிடத்திலும் தனிச் சிங்கள மொழியிலான கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது



எதுவாக இருப்பினும் மாவட்ட செயலகத்தினூடாக இவை இடம்பெற்றிருப்பதால் உரிய நடவடிக்கையை மேற்கொள்வாரா புதிய அரச அதிபர்?



வவுனியாவிற்கு புதிதாக கடமையேற்று வந்துள்ள அரச அதிபர் பெருன்பான்மை இனத்தை சேர்ந்தவர் என்பது யாவரும் அறிந்ததே.