இனி காற்று மாசு கருத்தில் கொள்ளப்படும் : பி.சி.சி.ஐ!!

361

இந்திய – இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.

டெல்லியில் காற்று மாசு நிலவுவதால் நேற்று முன்தினம் ஆட்டம் 3 முறை நிறுத்தப்பட்டு தொடர்ந்தது. மாசு பிரச்சினையால் இலங்கை அணி வீரர்கள் வாந்தி எடுத்ததாக இலங்கை அணி நிர்வாகம் போட்டி நடுவரிடம் புகார் தெரிவித்து இருந்தது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில், ‘இனி வரும் காலங்களில் டெல்லியில் கிரிக்கெட் போட்டி நடத்துகையில் காற்று மாசு குறித்து கருத்தில் கொள்ளப்படும்’ என்றார்.

நேற்றும் காற்று மாசு பாதிப்பு இருந்ததாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மத்யூஸ் குற்றம்சாட்டி இருந்தார்.