அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு!!

260


அனுராதபுரம் விலாச்சிய பிரதான வீதியின் ஆலயபத்துவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.



அனுராதபுரத்திலிருந்து விலச்சிய நோக்கி பயணித்த ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் அனுராதபுர பொதனேகம பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.