வவுனியாவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு!!

441

 
வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு இன்று (07.12.2017) காலை 9.30 மணிக்கு பாடசாலையின் பிரதி அதிபர் த.மோகன் தலமையில் நடைபெற்றது.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்ற எட்டு மாணவர்கள் உட்பட 55 மாணவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் மு.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன் வடமாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ப.தியாகராஜா ஆகியோர் கலந்து கொண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.