வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி சடலமாக மீட்பு : பொலிஸார் தீவிர விசாரணை!!

362
நெடுங்கேணி – பளம்பாசிப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்றைய தினம்(10.12) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யோகானந்தராசா கம்சிகா என்ற 20 வயதுயுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.