வவுனியாவில் பார ஊர்தி விபத்து : சாரதி மாரடைப்பால் உயிரிழப்பு!!

425

 
வவுனியா A9 வீதி புதூர் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தியின் சாரதிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளதுடன், பார ஊர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது..

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இரும்பகம் ஒன்றிற்கு பொருட்களை ஏற்றிச்சென்ற பார ஊர்தியின் சாரதிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டமையினால் பாரஊர்தி வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந் நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த பார ஊர்தியின் சாரதி உயிரிழந்திருந்திருந்தமை தெரியவந்தது.

உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அவரது சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.