வாடகை கொடுக்காததால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை!!

522

கமல்ஹாசனின் தசாவதாரம் மற்றும் சிம்புவின் ஒஸ்தி போன்ற தமிழ் படங்களில் தோன்றியிருப்பவர் பொலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்.

இவர் தன் காதலர் Cyrille Auxenfansவுடன் பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஒரு அபார்ட்மெண்டில் தாங்கிவந்துள்ளார். அதற்கு வாடகை 80,000 யூரோ (62 லட்சம் ரூபாய்) செலுத்தாமல் இருந்துள்ளார். அதனால் அந்த அபார்ட்மெண்டின் உரிமையாளர் அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார் என செய்திகள் பரவியது.

அதற்கு ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ள நடிகை, “எனக்கு பாரிஸில் வீடு உள்ளது என்பது உங்கள் செய்தியை பார்த்துதான் தெரிகிறது. அட்ரஸ் இருந்தால் அனுப்பிவிடுங்கள்” என தெரிவித்துள்ளார்.