ஒரே நாளில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை!!

293

ஈராக்கில் கொலை குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சன்னி போராளிகள் 38 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஈராக்கில் உள்ள நஸ்ரியா நகரின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்த தீவிரவாத கும்பலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் சிறைச்சாலையில் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி ஒரே நாளில் ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சன்னி போராளிகள் 42 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின் இன்று ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.