யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் 20 பேர் 3A சித்திகளைப்பெற்று சாதனை!!

247

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதில் 20 மாணவர்களுக்கு 3A சித்தி பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளனர்.

கணிதப் பிரிவில் 10 மாணவர்கயும், உயிரியல் பிரிவில் 4 மாணவர்களும், வணிகப் பிரிவில் 6 மாணவர்களும் 3A சித்தி பெற்று சாதித்துள்ளனர்.

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 943 பேர் தோற்றியிருந்த நிலையில், தனியார் பரீட்சார்த்திகள் 77 ஆயிரத்து 284 பேர் தோற்றியிருந்தனர்.

இவர்களில் 1 இலட்சத்து 63 ஆயிரத்து 104 பேர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.