மலிங்கவின் விடாமுயற்சியை பாராட்டிய பயிற்சியாளர்!!

431

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்க, அணியில் மீண்டும் இடம்பிடிக்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கிரிக்கெட் மீதான மலிங்கவின் அர்பணிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என பயிற்சியாளர் சந்திக ஹத்துருசின்ஹ தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, கடைசியாக இந்தியாவுக்கு எதிரான T20 தொடரில் விளையாடினார். அதன் பின்னர் அவருக்கு அணியில் இடம்கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் அவர் தற்போது விளையாடி வருகிறார். அணியில் மீண்டும் இடம் பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் மலிங்க, அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து ஹத்துருசின்ஹ கூறுகையில், NCC அணியில் விளையாடும் மலிங்க, இன்று போட்டி இல்லை என்று தெரிந்தும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். அவரின் உற்சாகமான இந்த பயிற்சியைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.

மேலும் அவர் மற்ற வீரர்களுக்கு ஒரு உந்துகோலாகவும், நல்லதொரு செய்தியையும் இந்த பயிற்சியின் வாயிலாக கூறுகிறார் என தெரிவித்துள்ளார்.

 

[news_list title=”இவற்றையும் படியுங்கள்” count=”10″ show_more=”on” show_more_type=”link” header_background=”#5681a0″ header_text_color=”#ffffff” hide_dots=”yes”]