வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் வைத்தியசாலையில்!!

344

 
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இன்று (04.01.2018) காலை 9.30 மணியளவில் இழுவை இயந்திரமும் மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

பட்டானிச்சூர் வயல்வெளிக்கு அருகாமையில் அமைந்துள்ள வர்த்த நிலையத்தில் பொருட்களை ஏற்றிக் கொண்டு மன்னார் வீதியூடாக பயணித்த இழுவை இயந்திரம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மன்னார் வீதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.