வவுனியாவில் சட்டவிரோமாக விற்பனை செய்யப்பட்ட 14 லட்சம் பெறுமதியான புகையிலைப் பொருட்கள் மீட்பு!!

277

 
வவுனியா நகரத்தில் அமைந்துள்ள இரு வர்த்தக நிலையங்களில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வவுனியா மதுவரி திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (04.01.2018) காலை குறித்த இரு வர்த்தக நிலையத்திலிலும் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது இரு வர்த்தக நிலையங்களிலும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 14லட்சம் பெறுமதியான புகையினை கைப்பற்றியுள்ளதாகவும் குறித்த உற்பத்தி பொருளை விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வவுனியா மதுவரி திணைக்கள் அத்தியட்சகர் எஸ்.செந்தூர்செல்வன் தெரிவித்தார்.

புகையினையினை உற்பத்தி செய்யும் நபர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ் உற்பத்தி பொருட்கள் இலங்கையில் பிரபல புகையிலை தயாரிப்பு நிறுவனத்தில் சின்னங்கள், பெயரைப் பயன்படுத்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.