இறந்த சடலங்களை தோண்டி உணவு ஊட்டும் மக்கள்: ஆச்சரியமளிக்கும் வினோத விழா!!

389

 
இந்தோனிசியாவில் இறந்த சடலங்களை தோண்டி அவரது உறவினர்கள் உணவளிப்பது மற்றும் உடை உடுத்தும் திருவிழா நடந்தது.

இந்தோனிசியாவின் Sulawesi பகுதியில் உள்ள Tana Toraja-வில் Toraja மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இறந்த தங்கள் கணவர், மகன் மற்றும் தாத்தா, பாட்டி போன்றோரை புதைத்த இடத்தில் இருந்து தோண்டி அவர்களுக்கு கண்ணாடி அணிவது, உடை போட்டுவிடுவது, உணவு அளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அது தொடர்பான புகைப்படங்களை பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கையில், Toraja மக்கள் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை Ma’nene என்ற திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

இந்த திருவிழா அவர்களுக்கு முக்கிய திருவிழாவாக பார்க்கப்படுகிறது. ஏனெனின் குறித்த திருவிழாவின் போது, அவர்கள் இறந்த தங்கள் உறவினர்களை தோண்டி எடுத்து இந்த காலக்கட்டத்தில் எப்படி இருக்கிறதோ அது போன்று உடை, செல்போன் மற்றும் அவர்களுடன் பேசவும் செய்கின்றனர்.

இதன் மூலம் அக்கிராம மக்கள் தங்கள் உறவினர்கள் இறக்கவில்லை, உயிருடன் தான் இருக்கின்றனர் என்று நம்புகின்றனர், அதுமட்டுமின்றி அவர்களுடன் ஒன்றாக இருக்கும் படி புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

அப்படி இறந்தவர்கள் தோண்டி எடுக்கப்படும் போது, பக்டீரியாக்கள் தங்கள் மீது பரவாமல் இருக்க முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்கின்றனர். இதை அவர்கள் ஒரு பரம்பரை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இங்கு கிறிஸ்துவர்களே அதிகம் இருப்பதாகவும், அவர்கள் இறப்பை இறுதிமுடிவாக எடுத்துக் கொள்வதில்லை, அன்றைய திருவிழாவின் போது பட்டாசுகள், நடனங்கள் போன்றவைகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.