வவுனியாவில் மர்மமான முறையில் வெட்டியும், தூக்கில் தொங்கிய நிலையில் இரு சடலங்கள் மீட்பு!!

437

 
வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று (09.01.2017) காலை 10 மணியளவில் காயங்களுடனும், தூக்கில் தொங்கிய நிலையிலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.


கணவனைப் பிரிந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த செல்வம் புஸ்பராணி என்பவர் அவரது மகளின் மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந் நிலையில் வவுனியா நெடுங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த பியசேனகே எதிரிசிங்க என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. நேற்றையதினம் மாலை இவர்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகரித்து விட்டு இருவரும் முரண்பட்டுள்ளனர்.

பின்னர் குறித்த பெண் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சடலமாகக் காணப்பட்டதுடன் குறித்த நபரும் தூங்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனை அவதானித்த குறித்த பெண்ணின் பேத்தி அயலவர்களுக்கு தெரிவித்ததையடுத்து அயலவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தடவியல் பொலிஸாருடன் இணைந்து மகாறம்பைக்குளம் காவலரண் பொலிஸார் வவுனியா பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.