கிளிநொச்சியில் சற்று முன்னர் கோர விபத்து  : சம்பவ இடத்திலேயே நால்வர் பலி!!

691


 
கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நால்வர் பலியாகியுள்ளனர். இச் சம்பவம் சற்று முன்னர் 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கயஸ் வாகனம் ஒன்று இன்னொரு வாகனமொன்றுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ் விபத்து சம்பவம் இம்பெற்றுள்ளது.



இந்த விபத்து மாங்குளம்- கொக்காவில் ஏ9 வீதியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.