வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை  அம்பாள் ஆலய தைபொங்கல் விழா -2018

956


வவுனியா ஓமந்தை  அரசர்பதி ஸ்ரீ கண்ணகை  அம்பாள்  ஆலயத்தில் எதிர்வரும் 14.01.2018  ஞாயிற்றுகிழமை  காலை 9.00 மணி முதல்  பொங்கல் விழா இடம்பெறவுள்ளது .

முற்றிலும் பாரம்பரிய முறைப்படி  கோவில் வயலில் நெல்லை அறுவடை செய்து நெற்கதிர் ஊர்வலமாக மாட்டு வண்டியில் எடுத்துவரப்பட்டு ஆலய முன்றலில் பாரம்பரிய முறையில் குத்தி அரிசி ஆக்கப்பட்டு கண்ணகை அம்மனுக்கு விசேட பொங்கல் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இவ் நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வண்ணம் கலை நிகழ்ச்சிகளும்,சிறப்பு நடனம் ,சிறப்பு மேள கச்சேரி , உறிஉடைத்தல் போன்ற நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.