விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தென்னிலங்கை இளைஞர்களின் கண்டுபிடிப்பு!!

873

 

விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப வழிமுறைகளை பயன்படுத்தி, தென்னிலங்கை இளைஞர்கள் சிலர் படகு ஒன்றை தயாரித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியை பயன்படுத்தி கடலில் பயணிக்கும் இயந்திரம் ஒன்றை இளைஞர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர்.

முச்சக்கர வண்டிக்கு சில இயந்திரங்களை பயன்படுத்தி அதில் வெற்றிகரமாக கடலில் பயணிப்பதற்கான முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டுபிடித்தவர் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் இது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சி வெற்றியளித்தால், இதனை மேலும் அபிவிருத்தி செய்து வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களுக்கு தேவையான இயந்திரங்களை, அங்குள்ள வளங்களை கொண்டு தயாரித்து வெற்றி கண்டிருந்தனர்.

இவ்வாறு தயாரிக்கப்பட்டவையில் கடற்கரும்புலிகளுக்கு தேவையான படகுகள் சிறப்பு வாய்ந்ததாகும். விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப உத்திகள் சர்வதேசத்தை மிளரச் செய்திருந்தது.

இந்நிலையில் அதேபாணியில் தென்னிலங்கை இளைஞர்களும் கடலில் சவாரி செய்யும் முச்சக்கரவண்டி படகினை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.