மீண்டும் பயங்கரம் : ஒருதலைக்காதலால் குத்தி கொலை செய்யப்பட்ட இளம்பெண்!!

322

 

ஆந்திராவில் தனது காதலை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் இளம்வயது பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜானகி(23) என்ற பெண் ஹைதராபாத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகிறார். அங்கு, இவருடன் பணியாற்றும் ஆனந்த் என்பவர் கடந்த 6 மாதகாலமாக ஜானகியை காதலித்து வந்துள்ளார்.

மேலும், தன்னை காதலிக்குமாறும் இல்லையென்றால் உன்னை கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்வேன் என அவ்வப்போது மிரட்டி வந்துள்ளார். ஆனால் இதற்கு ஜானகி சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற போது, ஜானகியின் வீட்டிற்கு ஆனந்த் சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த ஜானகியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார், அதன்பின்னர் தான் கொண்டுவந்திருந்த கத்தியை எடுத்து ஜானகியை சரமரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துசென்றுள்ளார்.

ரத்தவெள்ளத்தில் கிடந்த ஜானகியை ரூபா என்ற அவரது தோழி அருகில் இருப்பவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டபோதும், ரத்தம் அதிகமாக வெளியேறி ஜானகி இறந்துவிட்டார்.

ஜனாகியின் மரணம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொலிசார் ஆனந்தை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் ஹைதராபாத்தில் ஒருதலைக்காதலால், இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து உயிரோடு எரித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.