சென்னையில் மர்மமாக உயிரிழந்த பின்லாந்துப் பெண்!!

271

சென்னையில் பின்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் ஹொட்டலில், பின்லாந்தைச் சேர்ந்த ஹூலியா நே எமிலியா என்ற பெண், அவரது நண்பருடன் சேர்ந்து நேற்று இரவு தங்கியுள்ளார்.

இன்று காலையில், அவர் உயிரிழந்துகிடந்தார். அதைப் பார்த்த ஹொட்டல் நிர்வாகிகள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், பெண்ணுடன் வந்தவரைப் பிடித்து விசாரணை செய்துவருகின்றனர்.