310வது நாளை எட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்!!

239


யுத்த காலப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கோரி, முல்லைத்தீவு மக்கள் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டம் நாளையுடன் (12.01) 310வது நாளை எட்டுகிறது.



எதுஎவ்வாறு இருப்பினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை உரிய அவதானம் செலுத்தவில்லை என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலக அலுவலகத்தின் முன்னாள் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



இதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் போன்ற பகுதிகளிலும் மக்கள் தமது எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இந்தப் போராட்டங்கள் 300வது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.


இந்தநிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அதிகாரிகள், சர்வதே தொண்டு அமைப்புக்களின் அதிகாரிகள், வௌிநாட்டு ஊடகவியாளர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, சென்று சந்தித்துள்ள போதும், இதுவரை உரிய தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.