வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த இரு இலங்கைப் பெண்கள் : காரணம் வெளியானது!!

205


மத்திய கிழக்கு நாடான குவைத் நாட்டிற்கு சென்ற நிலையில், இலங்கையைச் சேர்ந்த பணிப் பெண்கள் இருவர் உயிரிழந்தமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.



நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதபரிசோதனைகளின் போது, குறித்த இருவரும் நச்சுப் புகையினை சுவாசித்தமையின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் பணியாற்றிய வீட்டில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக வெளியாகிய நச்சுப்புகையினை சுவாசித்தமையின் காரணமாக இந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



இரத்தினபுரி, கஹவத்தையைச் சேர்ந்த 30 வயதான டீ.செல்வகுமாரி மற்றும் 40 வயதான ஜீ.ஜீ. நிலந்தி ஷிரோமினி குணவர்தன ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.



இருவரினதும் சடலங்கள் அண்மையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், பிரேதபரிசோதனைகள் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரதம சட்ட வைத்திய நிபுணர் ரூஹுல் ஹக்கினால் மேற்கொள்ளப்பட்டது.


இந்த நிலையில், குறித்த இரு பெண்களும் நச்சுப் புகையினை சுவாசித்தமையின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.