இலங்கை வந்த வெளிநாட்டவர் விபத்தில் மரணம்!!

275
காலி – மாத்தறை பிரதான வீதியின் கும்புருகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து காரணமாக ரஷ்ய நாட்டவர்கள் இருவர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களின் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்றவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டவில பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை இவர்கள் இருவரும் மாத்தறையில் இருந்து வெலிகம பிரதேசத்திற்கு சைக்கிளில் பயணிக்கும் போது இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்து ஏற்பட்ட போது குறித்த ரஷ்ய நாட்டவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.