ஹெலிகாப்டரில் இருந்து கீழே விழுந்த 3 இராணுவ வீரர்கள் படுகாயம்!!

791


டெல்லியில் வரும் 15ம் திகதி இராணுவ தினத்தையொட்டி கண்கவர் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.



இதையொட்டி, டெல்லி அணிவகுப்பு மைதானத்தின் மீது இராணுவ வீரர்கள் ‘துருவ்’ ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிற்றில் தொங்கியபோது அது அறுந்துவிட்டது. இதனால் 3 வீரர்கள் கீழே மைதானத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.



அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தற்போது அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர்.கடந்த செவ்வாய்க்கிழமையன்று இந்த சம்பவம் நடந்தது.



நேற்று தான் இது குறித்த தகவல்கள் கசிந்து உள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. துருவ் ஹெலிகாப்டர், முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.