வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் திருட்டு!!

620

 
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் இன்று (15.01.2017) அதிகாலை திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் மேல் பகுதியினூடாக நுழைந்த திருடர்களே இத்திருட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் ஆலயத்தில் இருந்த தேர் திருப்பணி உண்டியல் உட்பட மேலுமொரு உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆலயத்தின் அலுவலக அறையின் கதவு மற்றும் யன்னல் உடைக்கப்பட்டிருந்ததுடன் அலுவலகத்தினுள் புகுந்து பணத்தினையும் திருடர்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.

அத்துடன் ஆலயத்தின் மற்றுமொரு அறையில் வைக்கப்பட்டிருந்த தேர் திருப்பணிக்கான பற்றுச்சீட்டுக்களை ஆலயத்தின் பின்புறமாக கைவிட்டுச் சென்றுள்ளனர்.

இந் நிலையில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.