வட பகுதி கடற்பரப்பில் பெருந்தொகை தங்கம் மீட்பு!!

229


 
வட பகுதி கடற்பரப்பில் பெருந்தொகை தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில், மீன்பிடிப் படகொன்றில் நங்கூரத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் குறித்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது.



வட கடல் ஊடாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படுவதாக காங்கேசன்துறைகடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இந்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட தங்கம் சுமார் 7 கிலோகிராம் என கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். தங்கத்துடன் வடமராட்சியை சேர்ந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



குறித்த தங்கத்தின் பெறுமதி 5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.



கைப்பற்றப்பட்ட தங்கம் இன்று யாழ். தெல்லிப்பழையிலுள்ள சுங்கப்பிரிவினரிடம் கையளிக்கப்படுவதுடன் சந்தேகநபர்களையும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்துவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.