ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்த தம்பதி : உருக வைக்கும் காரணம்!!

514

ஈரோடு மாவட்டத்தில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ரோடு ரங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் மாதேஸ்வரன்(56) – ராஜாமணி(45) தம்பதியர், இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. இவர்கள் இருவரும், திருமண விழாவில் சமையல் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு 8 மணியளவில் ரங்கம்பாளையம் பகுதியில் உள்ள தண்டவாளத்திற்கு மாதேஸ்வரன் மற்றும் ராஜாமணி இருவரும் சென்று, கைகோர்த்தபடி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், மாதேஸ்வரன் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்ததும், கடன் தொல்லை மற்றும் குழந்தை இல்லாத ஏக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட மன உளைச்சலால் தனது மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தம்பதியரின் உடல்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.