தோழியை கொன்ற பெண் : காட்டிக் கொடுத்த செல்பி!!

336

கொலையை கண்டுபிடிக்க போலீஸுக்கு ஒரு செல்ஃபி புகைப்படம் உதவியது என்றால் நம்பமுடிகிறதா? ஆம் இது உண்மையிலேயே நடந்துள்ளது, கனடாவில் 2 ஆண்டுகளுக்கு முன் பிரிட்னி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் சாஸ்கடோன் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் குற்றவாளி யார் என்பது தெரியாமல் இருந்தது. ஆனால் பிரிட்னியின் உடல் அருகே பெல்ட் ஒன்று கிடந்தது, இதை முக்கிய ஆதாரமாக கருதிய பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையே பிரிட்னி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது, பொலிஸாருக்கு பிரிட்னியின் தோழியான ஆண்டனி மீது சந்தேகம் இருந்தது.

இந்நிலையில் ஆண்டனியின் பேஸ்புக் பக்கத்தை பொலிசார் ஆராய்ந்த போது, பிரிட்னி கொல்லப்படுவதற்கு முன்பாக இருவரும் செல்பி எடுத்த புகைப்படம் இருந்தது.

அதில் ஆண்டனி அணிந்திருந்த பெல்ட்டும் , கொலை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட பெல்ட்டும் ஒரே மாதிரி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்பின்னர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆண்டனி, மது போதையில் இருவருக்கும் வாக்குவாதம் நடந்ததால் ஆத்திரத்தில் பிரிட்னியை கொன்றதாக தெரிவித்துள்ளார்.

ஆண்டனிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.