பெற்ற தாய்க்கு மகன் ஒருவர் செய்த மோசமான செயல்!!

309

70 வயதான தனது தாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவரை மாத்தறை – வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மாத்தறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம், வெலிகம – முகுதுகமுவ, விஜேரத்ஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் 13 ஆண்டுகளாக சிறையிலிருந்த நிலையில், கடந்த மாதமே விடுதலை செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது சகோதரியின் மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த நபர் தனது தாயையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பிரதேசவாசிகள் வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.