வவுனியாவில் கசிப்பு விற்பனை செய்தவர் பொலிசாரால் கைது!!

346

வவுனியாவில் நேற்று மாலை சிதம்பரபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் நேற்று மாலை சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை மேற்கொண்ட வடிவேல் சதீஸ்குமார் என்ற வயது 36 வயது நபரை 750மில்லி லீற்றர் சட்டவிரோ கசிப்பு விற்பனையின்போது கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்க்பபட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதவான நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.