வைரமுத்துவை படுகொலை செய்யத் திட்டம் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

594

தபால்கர், கௌரி லங்கேஷ் வரிசையில் கவிஞர் வைரமுத்துவையும் படுகொலை செய்ய பிஜேபியினர் திட்டமிட்டுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மனித நேய மக்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றி வருபவர் சையது. தமிழகத்தில் ஆண்டாள் குறித்த சர்ச்சை பூதாகரமாக வெடித்து வரும் நிலையில் சிவகங்கையில் அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் ஹஜ் மானியம் ரத்து செய்யப்பட்டது கவலை அளிக்கவில்லை, ஆனால் இந்திய அரசின் இந்த துரோக செயல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹச்.ராஜா போன்ற பாஜக மூத்த தலைவர்கள் ரவுடித்தனமாக அரசியல் செய்து வருவது நாட்டிற்கு நல்லதல்ல, இந்த போக்கு நீடித்தால் இந்தியாவின் ஒற்றுமை சீர்குலையும் என தெரிவித்துள்ளார்.

மேலும் எழுத்தாளர்கள் தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்ட வரிசையில் வைரமுத்துவையும் கொலை செய்ய பாஜகவினர் திட்டம் தீட்டியுள்ளனர்.

அப்படி ஒரு நிலை வைரமுத்துவிற்கு ஏற்படுமேயானால், அவரை மனித நேய மக்கள் கட்சியினர் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆண்டாள் குறித்த சர்ச்சை பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் சையது இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.