வவுனியாவில் ஜனாதிபதி மைத்திரியை மகிழ்வித்த சிறுமி!!

701

நாட்டின் சிறுவர்கள் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளவு கடந்த அன்பினை வெளிப்படுத்திய பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் வவுனியாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சிறுமி ஒருவரை அரவணைத்த காணொளி வெளியாகி உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது மேடைக்கு சென்று ஜனாதிபதியை சந்தித்த சிறுமி, மனு ஒன்றை கையளித்ததுடன் அவரின் ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரனினால் சிறுமி அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.