வவுனியா செட்டிகுளம் கோட்டக்கல்வி அதிகாரி ச.ஜேசுதாசனுக்கு மணிவிழா!!

903


 
அகன்று விரிந்த வன்னி நிலபரப்பின் வாயிலாக விளங்கும் வவுனியா மாவட்டத்தில் வந்தாரை வாழ வைக்கும் செட்டிக்குள பிரதேசத்தின் நாட்குறிப்பில் இன்றைய நாள்(06.02.2018) பொன் எழுத்துகளால் பொறிக்க பட வேண்டிய ஒரு நன்னாள்.

ஆம் கல்வி தான் உன்னை வாழவைக்கும் என்று கூறி அங்குள்ள மாணவர்களின் கல்வியில் அயராது உழைத்து இன்று தனது 60 அகைவையில் மணிவிழா மகுடம் சூட்டி கெளரவிக்கப்படுகிறார் செட்டிக்குள பிரதேச கல்வித் தந்தை என்று போற்ற படுகின்ற ச.ஜேசுதாசன் அவர்கள்.



கல்வி கலங்கரை விளக்காக ஆயிரம் ஆயிரம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிப் பாதையில் தனது வியர்வையை சிந்தி இன்று அவர்கள் வைத்தியராக, பொறியியலாளராக, கணக்கியல் நிபுணராக , சட்டத்தரணியாக, அதிபராக, ஆசிரியராக தன் சேவைகளை தொடர அடித்தளம் போட்டவர் இந்த ஜேசுதாசன் ஆசான் என்பது செட்டிக்குள வரலாறு சொல்கின்ற உண்மை.

1991 யுத்த காலம் தொடக்கம் பாடசாலையைப் பொறுப்பேற்று நடத்திய இவர் 2009 வன்னி இறுதி யுத்தத்தின் போது அரசு செட்டிகுளம் மகாவித்தியாலயத்தை மக்களின் வாழ்விடமாக மாற்ற தன் சொந்த காணி நிலத்தில் தற்காலிக குடி அமைத்து அல்லும் பகலும் அயராது உழைத்து இன்று ஒரு சூரியன் போன்று உயர்ந்தது நிற்கின்றார்.



செட்டிகுளம் பிரதேசத்தில் பிறந்து அங்கே கல்வி கற்று பல்கலை சென்று ஆசிரியராக பணியாற்றி அதிபராக பதவியேற்று பதினைத்து வருடங்களுக்கு மேல் என் சக மாணவர்க்கு பணி ஆற்றி இன்று செட்டிக்குளம் கோட்டக் கல்வி அதிகாரியாக பதவி வகிக்கும் இவர் செட்டிகுளம் பிரதேசத்தின் கல்வித் தந்தை என்று அழைக்க சாலப் பொருத்தமானவரும் கூட.



மாணவர்களுக்கு மட்டுமில்லாது தன்னுடன் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரின் மீதும் தனிபட்ட அக்கறை கொண்ட இவர் இன்று தன்னுடன் பணி செய்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடசாலையில் இருந்து வந்து இவரை வாழ்த்தும் போது பேருவகைகொள்கின்றார்.


காலம் மாணவர்களைப் பிரித்து தனித் தனி தேசம் கொண்டு சென்றாலும் ஜேசுதாசன் என்ற பெயரிற்கு கூடிய வெள்ளம் போன்ற பழைய மாணவர்களும் அவர்களுடடைய சரீர, நிதி உதவிகளும் இதற்குச் சான்று.

இவர் பணி சிறக்கவும் மென்மேலும் தொடரவும் எங்கள் கல்வித் தந்தையை வாழ்த்தி நிற்கின்றோம் .


பழைய மாணவர்கள்
செட்டிகுளம் மகாவித்தியாலயம்