மூன்றரை கிலோ தங்கத்துடன் இருவர் கைது!!

468


 
சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தங்கம் கடந்திய இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மாதகல் கடற்பரப்பு ஊடாக இந்தியாவுக்கு, தங்கம் கடத்திய நிலையில், குறித்த இருவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை கடற்படையினர் தெரிவித்தனர்.



கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து, 3 கிலோ 700 கிராம் நிறையுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகை சோதனையிட்டபோது, குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.



பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தையும், கைது செய்யப்பட்ட இருவரையும் வடமாகாண சுங்க திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.