சுவிஸில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞனின் விபரம் வெளியானது!!

307

 
சுவிஸ்லாந்தில் இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் ஒன்று பதிவாகியிருந்து.

சுவிஸ்சலாந்தின் Ecublens VD பகுதியில் கடந்த புதன்கிழமை 20 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த நபர் தொடர்பிலான விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த வகையில், மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் வசிக்கும் றெபின்சன் றொட்ரிகோ துஸான் றொன்சின்ரன் (20) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இவர் சுவிட்சர்லாந்தின் ECUBLENS VD பகுதியில் கடந்த 3 வருடங்களாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையிலேயே, அவர் கடந்த புதன்கிழமை (07.02) மாலை இனம் தெரியாத நபர்களினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..