வவுனியாவில் தமிழரசுக்கட்சி பெண் வேட்பாளருக்கு அச்சுறுத்தல்!!

376

வவுனியா கற்குளியைச் சேர்ந்த தமிழரசுக்கட்சியின் பெண் வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இன்று (10.02.2018) இடம்பெற்றுள்ளது.
இச்சம்வம் குறித்து கருத்து தெரிவித்த குறித்த பெண் வேட்பாளர்..

தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு வாக்களிக்கச் சென்ற வேளை தனது வீட்டிற்கு அருகாமையில் வைத்து ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஒருவர் “வீட்டிலே போய் இரடி இல்லாட்டி உன்ர பிள்ளைகளுக்கு அம்மா இருக்காது” என அச்சுறுத்தல் விடுத்ததுடன் தகாத வார்த்தைகளை பிரயோகித்ததாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே மாற்றுக் கட்சியினரால் எனக்கு அச்சுறுத்தல் சம்பவம் நடந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ள சென்ற நிலையில் எனது முறைப்பாட்டை பொலிசார் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை என தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..