வவுனியாவில் 72 வீத வாக்குப்பதிவு :  இன்னும் சில மணிநேரங்களில் முடிவுகள்!!

436

நடைபெற்றுவரும் உள்ளூராட்சி சபைகளுக்கான இறுதி முடிவுகள் இரவு எட்டு அல்லது ஒன்பது மணியளவில் அறிவிக்கப்படும் என வவுனியா அரசாங்க உதவி அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார். தேர்தலின் கள நிலவரங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அனைத்து வாக்குசாவடியிலும் சுமூகமான முறையில் வாக்கு பதிவுகள் இடம்பெற்றன. இதுவரையான நிலவரப்படி 70-72 சதவீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுவரை எதுவித பாரிய முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கவில்லை.

56 வாக்கு நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறுதிமுடிகளை இரவு எட்டு அல்லது ஒன்பது மணியளவில் அறிவிக்க எதிர்பார்த்துள்ளோம்.

10 மணித்தொடக்கம் வட்டார ரீதியிலான முடிவுகளின் அடிப்படையில் விகிதாசார ஆசனங்களின் எண்ணிக்கை முடிவுசெய்யப்பட்டது இறுதி ஆசனப் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

முழுமையான தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..