உத்தியோகபூர்வ தேர்தல் முடிவை வெளியிடுவதில் தாமதம் : பொறுமையுடன் இருக்குமாறு வேண்டுகோள்!!

232
நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகளை வெளியிடும் வரையில் பொறுமையுடன் இருக்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய சற்றுமுன்வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு

உள்ளுராட்சிமன்ற தேர்தல் வாக்களிப்பு – 2018 உத்தியோகபூர்வ தேர்தல் முடிவை வெளியிடுவதில் தாமதம் 

அந்தந்த மத்திய நிலையங்கள் மற்றும் வட்டார வாக்குகளை எண்ணும் பணி நிறைவடைந்து பெறுபேறுகளை தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் தொலைநகல் மற்றும் தொலை பேசியினூடாக கிடைக்கப்பெற்றிருந்போதிலும் கையால் எடுத்துச்செல்லப்படும் பெறுபேறுகளை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டிய நிலை தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒரு வட்டாரத்தின் பெறுபேறை அறிவிக்கும் போது தபால் மூல வாக்களிப்பு பெறுபேறை ஒன்றிணைத்து அறிவித்துள்ள போதிலும் சில இடங்களில் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தொலைநகல் மூலம் அவை அனுப்பப்பட்ட பெறுபேறுகளின் அறிக்கை இரண்டில் ஒன்று மாத்திரம் என்பதினால் மொத்த பெறுபேறுகளை தயாரிக்கும் பொழுது மீண்டும் மீண்டும் பரிசோதிக்க வேண்டிய நிலை தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருப்பதினால் அந்தந்த உள்ளுராட்சி மன்றங்களின் பெறுபேறுகளை அறிவிப்பதற்கு மேலும் குறிப்பிடத்தக்க நேரம் செல்லும் என்பதை தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் வட்டார பெறுபேறுகளை தெரிவத்தாட்சி அதிகாரியினால் தரவுக்கட்டமைப்பிற்குள் சேர்க்கும் வரையில் அந்த உள்ளுராட்சி மன்றத்தின் மொத்த பெறுபேறையும் ஊடகத்திற்கு அறிவிப்பதற்குரிய சூழ்நிலை இல்லை என்பதை தயவுடன் கவனத்தில் கொள்ளவும்.

பெறுபேறுகள் வெளியிடும் வரையில் பொறுமையாக இருக்குமாறு மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் .

மகிந்த தேசப்பிரிய
தலைவர்
தேர்தல்கள் ஆணைக்குழு