உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட நபர் திடீரென உயிரிழப்பு!!

277


உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற தினத்தில் மாரடைப்பு காரணமாக வேட்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



கடந்த 10ம் திகதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஜே.வி.பி.யின் வேட்பாளர் ஒருவர் உயிரிழந்தார்.

மாவத்தஹேன தெபஹெர பிதேசத்தைச் சேர்ந்த எச்.பீ. பிரேமரட்ன என்ற 60 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



மாரடைப்பு காரணமாக வத்துபிட்டிவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.



மீரிகம பிரதேச சபையின் ஜே.வி.பி வேட்பாளராக குறித்த நபர் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.