நாட்டின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

247
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊவா மாகாணம் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின் இடியுடன் கூடிய மழை பெய்யும் அதேவேளை மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு வரையான கடற்கரையோர பிரதேசங்களிலும் ஓரளவு மழைபெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.