என் கணவர் தான் கடவுள் : மனம் திறந்த நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷா!!

645

என் உணர்வுகளுக்கும், சுயமரியாதைக்கும் மதிப்பளிக்கக் கூடியவர் என் கணவர் என அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக மேடைப் பேச்சாளராக இருந்து வரும் அறந்தாங்கி நிஷா, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியிலும் கலக்கி கொண்டிருக்கிறார்.

இதோடு முன்னணி நடிகர்கள் படத்தில் நகைச்சுவை நடிகையாகவும் அறந்தாங்கி நிஷா நடித்து வருகிறார்.

அறந்தாங்கி நிஷாவின் வெற்றிகளுக்கு பின்னர் இருப்பது அவரின் கணவர் தான். கணவர் குறித்து அவர் கூறுகையில், அவரை போல என்னை புரிந்து கொண்டவர் இந்த உலகில் எவருமில்லை.

பெண்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்புவதே தவறு என கூறும் இந்த சமுதாயத்தில், நான் நிகழ்ச்சிகள் முடிந்து எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும் என்னை கணவர் எந்த கேள்வியும் கேட்டதில்லை. அதிகாலை 3 மணிக்கு கூட நிகழ்ச்சி சம்மந்தமாக எனக்கு போன் வரும், அப்போது செல்போனை என்னிடம் கொண்டு வந்து உனக்கென தனிப்பட்ட விடயங்கள் இருக்கும், நீ பேசு என கணவர் கூறுவார்.

அந்த அளவுக்கு என் உணர்வுகளுக்கும், சுயமரியாதைக்கும் அவர் மதிப்பளிப்பார். சுருக்கமாக சொல்வதென்றால், எனது கணவரை கடவுள் தந்த வரம் என்பதை விட கடவுளே நேரில் இறங்கி வந்தது போல தான் என் கணவர் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.