இலங்கை அரசியலில் பரபரப்பு : தனி அரசாங்கத்தை அமைக்குமாறு ரணிலிடம் வலியுறுத்தல்!!

244


ஐக்கிய தேசியக்கட்சியை தனி அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளனர்.



இதன் பிரகாரம் இன்றைய தினம் ஜனாதிபதியுடன் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடி தீர்க்கமான முடிவென்றை எடுக்கவுள்ளார்.

ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேருடன் இன்று நண்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.