பிரதமர் பதவியை கைவிடுவாரா ரணில்?

224

ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்ற, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன​ உறுதிப்படுத்தியுள்ளதாக பிபிசி சிங்கள சேவை செய்தி வௌியிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் புதிய பிரதமரை நியமிக்குமாறு ஜனாதிபதி அந்த கட்சிக்கு அறிவித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மேற்கொள்காட்டி வௌியிடப்பட்டுள்ள அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து விலகி, சஜித் பிரேமதாஸ அல்லது கரு ஜயசூரியவிடம் தலைமைத்துவத்தை, ஒப்படைக்க வேண்டும் என அந்தக் கட்சிக்குள் கருத்து வலுப்பெற்றுள்ளதாகவும் பிபிசி செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்து தனியாக ஆட்சியமைக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்த கருத்திற்கு பதிலளித்த ஜனாதிபதி,அவ்வாறு இணையும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு தாம் அமைச்சர் பதவிகளை வழங்கப் போவதில்லை என குறிப்பிட்டதாகவும் பிபிசி செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.