இலங்கையில் பாரிய எறும்புண்ணி கண்டுபிடிப்பு!!

288

 
இலங்கையில் சுமார் 15 கிலோ கிராம் நிறையுடைய எறும்புண்ணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பமுனுவ, தெலிவெவ பிரதேசத்தை சேர்ந்த விக்ரமசிங்க என்பவரின் வீட்டில் எறும்புண்ணி சிக்கியுள்ளது.

மிருகங்கள் அல்லது மனிதர்களினால் எறும்புண்ணிக்கு பாதிப்பு ஏற்படும் என எண்ணி குறித்த நபர் பொலிஸாருக்கு அறிவித்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறு அறிவித்துள்ளார்.

கொழும்பு வனவிலங்கு அலுவலகத்தில் அதனை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்த வீட்டை விட்டு செல்ல விரும்பாமையினால் அதிகாரிகள் அங்கையே விட்டு சென்றுள்ளனர்.

அழிந்து வரும் இந்த உயிரினம் இலங்கையின் மிக முக்கியமான உயிரினம் எனவும் நாடு முழுவதும் இது உள்ளதாகவும் பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்

ஒருவருக்கும் தீங்கு விளைவிக்காத இந்த உயிரினம் இந்தியா, இலங்கை பூட்டான் ஆகிய நாடுகளில் மாத்திரமே காண முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

விஞ்ஞான பெயரில் Maniscrassicaudata என்ற அழைக்கப்படும் இந்த உயிரினம் 15 கிலோ கிராமில் கண்டுபிடிக்கப்பட்டதென்பது ஒரு அரிய சம்பவமாக கருதப்படுகின்றது.