வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எமக்கு வேண்டும் எனப் போராட்டம்!!

298

 
வவுனியாவில் இன்று 355வது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் போனோரின் உறவினர்கள் இன்று உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் சர்வதேசத்தின் வருகையே எமது உறவுகளின் வருகையை உறுதிப்படுத்தும், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எமக்கு வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து தமது பிள்ளைகளுடன் ஒன்றிணைந்து இப்போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

சர்வதேசம் அமெரிக்க, ஜரோப்பிய ஒன்றியத்தின் வருகையை வலியுறுத்தி இன்றை போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12.30 மணியளவில் போராட்ட களத்தில் ஒன்றிணைந்த காணாமற்போனோரின் உறவுகள் தமது போராட்டத்தினை மேற்கொண்டதுடன் தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் தனது தந்தை, சகோதரர்கள், சகோதரிகளை மீட்டத்தருமாறும் அதுவரையில் தமது போராட்டத்தினை தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.