வவுனியாவில் 8 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

283


வவுனியாவில் இன்று(13.02) காலை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்ட 8 கிலோ கேரள கஞ்சாவினை வவுனியா மத்திய நகரில் வைத்து கைப்பற்றியுள்ளதாகவும் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,



வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வழிநடத்தலில் வவுனியா வலய பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னண்டோவின் ஆலோசனையில் வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மகிந்த வில்லவராச்சியின் கண்காணிப்பில்,

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.சுபசிங்க மற்றும் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் குழவினரால் யாழப்பாணம் பகுதியிலிருந்து இன்று காலை 10.20 மணியளவில் கொழும்பிற்கு பொதி செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 8 கிலோ கேரளா கஞ்சாவினை வவுனியா நகர மத்திய நிலையத்தில் வைத்து கொழும்பு வசிப்பிடமாக் கொண்ட 54 வயதுடைய நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.