வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு இராணுவத்தினரின் நல்லிணக்க பொங்கல்!!

631

 
இந்துக்களின் விசேட தினமான சிவராத்திரியை முன்னிட்டு இராணுவத்தினரால் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட பொங்கல் இடம்பெற்று பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

வன்னி படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை குறித்த பொங்கல் நிகழ்வும் விசேட பூஜை வழிபாடும் இடம்பெற்றது.

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பொங்கல் செய்து விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. இதன்போது வன்னிப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினர் எனப் பலரும் சீருடையுடன் கலந்து கொண்டு நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் வழிபாடுகளை மேற்கொண்டு பொங்கல் உண்டு சென்றனர்.

இதில் ஆலயக் குருக்கள், ஆலய நிர்வாகத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.