வவுனியாவில் திருக்கேதீஸ்வரத்திலிருந்து வந்த வாகனம் விபத்து : 7 பேர் படுகாயம்!!

802


 
திருக்கேதீஸ்வரத்திலிருந்து இன்று நண்பகல் 12 மணியளவில் வவுனியா நோக்கிச் சென்ற வான் ஒன்று வவுனியாவிலிருந்து கற்பகபுரம் பகுதிக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது வேப்பங்குளம் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் பேருந்திலிருந்த மூவரும் வானில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குபேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,



நேற்று திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குச் சென்றுவிட்டு வவுனியா நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்த கொழும்பைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் பயணித்த வான் வேப்பங்குளம் சமுர்த்தி வங்கிக்கு அருகில் வவுனியாவிலிருந்து கற்பகபுரம் பகுதிக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது பேருந்துடன் திடீரென்று மோதியுள்ளது.

இதில் வானில் பயணம் மேற்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேரில் கணவனான கேதீஸ்வரன் (40 வயது), மனைவி யாழினி (வயது 36), மகள் (7 வயது), கணவனின் தயார் விஜயலட்சுமி (60 வயது) காயமடைந்துள்ளதுடன் பேருந்தில் பயணித்த மூவர் சிறுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



வானில் பயணித்தவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் மூவர் கடுமையான காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குள பொலிசாரும் வவுனியா பொலிசாரும் மேற்கொண்டு வருகின்றனர்.