வவுனியா பண்டாரிகுளத்தில் வீடொன்று தீக்கிரை : பொலிசார் விசாரணை!!

496


 
வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் இன்று (14.02.2018) மாலை வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. அதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இத் தீ விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பண்டாரிகுளத்தில் சின்னையா சுப்பையா என்பவரின் வீட்டில் தாயும் மகளும் வசித்து வந்துள்ளனர். அவர்கள் தேவை நிமித்தம் வெளியே சென்றுள்ளனர். இன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீடு திடிரென தீப்பற்றியுள்ளது. அதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.



வீட்டின் சுவாமி அறையில் இருந்த பொருட்களை குவித்து தீயிடப்பட்டுள்ளதாகவும் குறித்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தில் அண்மை காலமாக குடும்பத் தகராறு இடம்பெற்று வருவதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.